என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆற்று மணல் கொள்ளை"
ஆண்டிப்பட்டி:
வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற பிரசார இயக்கத்தை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார்.
ஆறுகள் வறண்டால்தான் மணல் பரப்பில் கொள்ளையடிக்க முடியும் என்பதால் மழை பெய்யாமல் இருக்க அ.தி.மு.க.வினர் காடுகளை அழித்து வருகிறார்கள். இதன் காரணமாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாமல் ஆறு வறண்டு காட்சியளிக்கிறது. வைகை அணையை நம்பியுள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் விளை நிலங்கள் அனைத்தும் பாலைவனமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
தமிழகத்தின் 4-வது பெரிய ஆறான வைகை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்ளுக்கு உயிரோட்டமாகவும் உள்ளது.
கடந்த காலத்தை எடுத்து பார்த்தால் வைகையில் ஆண்டுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வராமல் இருக்கும். ஆனால் தற்போது ஆண்டுக்கு ஒரு மாதத்தில் மட்டும்தான் தண்ணீரே வருகிறது.
எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள 20 நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் ஓடும் 36 ஆறுகளை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார். #AnbumaniRamadoss #ADMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்